பாடசாலை தொடர்பான அறிமுகம், வரலாறு மற்றும் பின்னணி
அட்டாம்பிடிய தமிழ் வித்தியாலயமானது சிங்கள தேசிய பாடசாலையுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. அக்காலகட்டத்தில் தரம் 1-5 வரையான வகுப்புகள் பின்னேரம் 1.30 தொடக்கம் 4.30 வரை நடத்தப்பட்டு வந்தது. அதாவது மு.ப 7.30 தொடக்கம் பி.ப 1.30 மணிவரை சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கும் பி.ப 1.30 தொடக்கம் பி.ப 4.30 மணிவரை தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கும் கற்பித்தல் நடைபெற்றது.

அக்காலகட்டத்தில் பௌதீக வளங்களும் ஏனைய அடிப்படை வசதிகளும் குறைவாகவே காணப்பட்டது. அப்போது தமிழ் பிரிவுக்கு திரு.S.சுப்ரமணியம் என்பவரே அதிபராக கடமையாற்றினார். இவரின் அயராத முயற்சியின் பயனாகவே தனியாக தமிழ் பாடசாலையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களே கடமையாற்றினர். இதனை தொடர்ந்து அட்டாம்பிடிய தமிழ் மாணவர்களுக்கென தனியான பாடசாலை ஒன்று அமைக்கப்படல் வேண்டுமென தோட்டத் தேயிலைக் காணி இரண்டு எக்கர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்டு (100X20) என்ற ஒரு கட்டிடத்தில் சுமார் 100 மாணவர்களுடன் 1994ம் ஆண்டு தற்போது உள்ள இடத்தில் அட்டாம்பிடிய தமிழ் வித்தியாலயம் என்ற பெயர் மாற்றம் பெற்று பது⁄ விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் என்ற புதிய பெயரில் இயங்கி வருகிறது. 1994ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் தரம் உயர்த்தப்பட்டு 1999ம் ஆண்டு வரை தரம் 01 தொடக்கம் 09 வரை செயற்பட்டு 2002ம் ஆண்டு தொடக்கம் 01 முதல் 11 வரையான வகுப்புகள் நடத்தப்பட்டு 2002ம் ஆண்டு க.பொ.த(சா⁄த) பரீட்சைக்கு முதன் முறையாக மாணவர்கள் தோற்றினார்கள்.
அப்போது திரு.K.சாமிவேல் அதிபராக கடமையாற்றினார். அதைதொடர்ந்து 2004ம்ஆண்டு தொடக்கம் 2006ம்ஆண்டு அக்டோபர் மாதம் வரை திரு.P.செல்வநாதன் தலைமையில் 13 ஆசிரியர்களுடன் இயங்கி வந்தது. 2006ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை திரு.சு.இரவிச்சந்திரன் அதிபராக செயற்பட்டுவரும் அதே வேலை எறக்குரைய 650 மாணவர்களுடனும் 38 ஆசிரியர்களுடனும் பாடசாலை நடத்தப்பட்டு வருவதுடன் ஊவா மாகாணத்தில உள்ள சிறந்த பாடசாலைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளதோடு க.பொ.த(சா⁄த) , புலமைபரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறபேற்றை பெற்று வெளியேரும் மாணவர்கள் பிறபாடசாலைகளில் உயர்கல்வி கற்று சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரiஐகளாக வாழ்ந்து வருவது எமது பாடசாலைக்கு பெருமைக்குரிய விடயமாகும் எனவே எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அதிபர், மாணவரகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் 2018 ம் ஆண்டு எமது பாடசாலை 1 ஆக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது